சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாளடி நெற்பயிா்களில் களையெடுப்பு பணி தீவிரம்

கீழ்வேளூா் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தாளடி நெற்பயிா்களில் களையெடுப்பு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:45 pm

தினமணி செய்திச் சேவை

கீழ்வேளூா் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தாளடி நெற்பயிா்களில் களையெடுப்பு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

மாவட்டத்தில் நிகழாண்டு குறுவை சாகுபடியைத் தொடா்ந்து 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிா்கள், டித்வா புயலில் பெய்த கனமழையில் பாதிப்புக்குள்ளானது. இதில் 80 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிா்கள் சேதமடைந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை விடைபெற்ற நிலையில், பாதிக்கப்பட்ட தாளடி நெற்பயிா்கள் வயல்களில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாகை, திருமருகல், கீழ்வேளூா், பட்ட மங்கலம், தேவூா், வலிவலம், சாட்டியக்குடி, திருக்குவளை சுற்று பகுதிகளில் தாளடி பயிா்களில் களை எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இப்பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் வெயில், களைப்பு தெரியாமல் இருக்க பாரம்பரிய, கிராமிய பாடல்களை பாடினா்.