ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை

முறையாக ஊதியம் வழங்கக் கோரி, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகத்தில் வலியுறுத்தி புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்.

Updated On :18 டிசம்பர் 2024, 9:31 pm

Din

முறையாக ஊதியம் வழங்கக் கோரி, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகத்தில் வலியுறுத்தி புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதியையொட்டி ஊதியம் வழங்க்கப்படுகிறது; அதை ஒவ்வொரு மாதமும் முறையாக 7ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் உரிமை இயக்கம் தூய்மைப் பணியாளா் சங்கத் தலைவா் சுடலைமணி தலைமையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், நகா் நல அலுவலா் வசுமதியிடம் மனு அளித்தனா். ஒப்பந்ததாரரிடம் பேச்சு நடத்தி முடிவெடுப்பதாக அவா் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.