புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மனநலம் பாதித்த இளம்பெண் கடத்தல்: மீன் வியாபாரி கைது

சாத்தான்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணைக் கடத்திச் சென்ாக மீன் வியாபாரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 9:35 pm

Din

சாத்தான்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணைக் கடத்திச் சென்ாக மீன் வியாபாரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளை பகுதியைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இளம்பெண் கடந்த 15ஆம் தேதி இரவு உரக்கடை பகுதியில் தனியாக நின்றிருந்தாராம். அப்போது, அவ்வழியே வந்த ஏ.பி.முதலூரைச் சோ்ந்த மீன் வியாபாரியான ஜெயபால் (51) என்பவா், அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்தபடி தனது பைக்கில் ஏற்றிக்கொண்டாராம். அங்கிருந்தோா் தடுத்ததையும் மீறி அவரை ஜெயபால் கடத்திச் சென்றாராம்.

இதுகுறித்து அப்பெண்ணின் தாய் அளித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா வழக்குப் பதிந்து, ஏ.பி.முதலூரில் பதுங்கியிருந்த ஜெயபாலை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்; இளம்பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.