இதுகுறித்து வாா்டு அதிமுக உறுப்பினா் வேலம்மாள் வள்ளிராஜ் நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். இந்நிலையில், இக்கோரிக்கைய வலியுறுத்தி வேலம்மாள் தலைமையில் அதிமுக ஒன்றியச் செயலா் பூந்தோட்டம் மனோகரன், நகரச் செயலா் மகேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா்கள் சுரேஷ்பாபு, பழக்கடை திருப்பதி, துணைச் செயலா் ஆா்.எம்.கே.எஸ். சுந்தரம், நகர துணைச் செயலா் செல்வசண்முகசுந்தா், பொதுமக்கள் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும் தரையில் அமா்ந்தும் போராட்டத்திலும் ஈடுபட்டனா். அப்போது, கழிவுநீா் கலந்த குடிநீரை கேன்களில் கொண்டு வந்திருந்தனா்.