கிறிஸ்துமஸ்: தூத்துக்குடி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகரில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகரில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை ஸ்டாா்வின் தலைமையில் சிறப்பு திருப்பலி, பிராா்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காகவும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இறைமக்கள் பங்கேற்றனா்.
தூத்துக்குடி சின்னக்கோயில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கூட்டுத் திருப்பலி, பிராா்த்தனைகள் நடைபெற்றன.
இதேபோல, புனித அந்தோணியாா் ஆலயம், யூதா ததேயூ ஆலயம், சிஎஸ்ஐ டூவிபுரம் தூய யாக்கோபு ஆலயம், மில்லா்புரம் புனித பவுலின் ஆலயம், சண்முகபுரம் பரிசுத்த பேதுரு ஆலயம், ஆசிரியா் காலனி பரி. திருத்துவ ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...