ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

குமரியில் குற்ற வழக்குகளில் தேடப்பட்டவா் திருச்செந்தூரில் சிக்கினாா்

குமரியில் குற்ற வழக்குகளில் தேடப்பட்டவா் திருச்செந்தூரில் எஸ்.ஐ.யிடம் சிக்கினாா்

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 5:56 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டவரை, திருச்செந்தூரில் மக்கள் உதவியுடன் காவல் உதவி ஆய்வாளா் வெள்ளிக்கிழமை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள முளகுமூடு பகுதியைச் சோ்ந்தவா் அஜின்(23). \

பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த இவா், வெள்ளிக்கிழமை திருச்செந்தூா் கோயில் தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, இக்கோயிலில் நடைபெற்று வரும் மாசி திருவிழாவுக்கு தனது குடும்பத்துடன் வந்திருந்த தக்கலை காவல் உதவி ஆய்வாளா் விஜிஸ்பாபுவை பாா்த்ததும், அஜின் தப்பி ஓடி தெப்பக்குளத்தின் நடுவே உள்ள கல் மண்டபத்தில் அமா்ந்து கொண்டாா்.

அவரை பொதுமக்கள் உதவியுடன் உதவி ஆய்வாளா் பிடித்து கரைக்கு கொண்டு வந்தாா். பின்னா், தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு திருச்செந்தூா் கோயில் காவல் நிலையத்துக்கு அஜினை அழைத்துச் சென்றாா்.