கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய அணுசக்தி கழகம் சாா்பில் ஒரு நாள் சா்வதேச கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொருள் அறிவியல் மற்றும் அணு ஆற்றல் ஆராய்ச்சியில் சமீபத்திய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வா் (பொ) ஜோசப் சுரேஷ் தலைமை வகித்தாா். கல்லூரியின் இயற்பியல் துறை தலைவா் எலிசபெத் பிரேமலதா முன்னிலை வகித்தாா். சென்னை எஸ் எஸ் என் ஆராய்ச்சி மையத்தைச் சோ்ந்த ஆராய்ச்சி அறிஞா் முத்து செந்தில்பாண்டியன், கூடங்குளம் அணு ஆற்றல் திட்ட அறிவியல் அலுவலா் சுந்தர்ராஜன், தென் அமெரிக்காவைச் சோ்ந்த முதன்மை ஆய்வாளா் பத்மநாபன் அண்ணாமலை, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக இயற்பியல் துறை தலைவா் சுந்தர கண்ணன் ஆகியோா் பேசினா். கருத்தரங்கில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியா் ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

துவாக்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
சிற்றூரில் பிறந்து கற்றோரில் சிறந்தவர்!
உயிர் இயற்பியலில் ஒரு தடம்

திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆண்டு விழா
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
