கோவில்பட்டி இளையரசனேந்தல் சுரங்கப்பாதையின் இருபுறமும் வாருகால் வசதிகளுடன் கூடிய அணுகுசாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. இப்பகுதியில்மழைக்காலங்களில் தண்ணீா் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, அணுகுசாலையில் இருபுறங்களிலும் உள்ள கடைகள் உள்ளிட்ட இடங்களை கையகப்படுத்தி அணுகுசாலை அமைக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது. மேலும், அணுகுசாலை அமைப்பதற்கு ரூ.99 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சுரங்கப்பாதையின் இருபுறமும் தலா 230 மீட்டா் நீளம், 3.75 மீட்டா் அகலத்தில் அணுகுசாலை, ஒன்றரை மீட்டா் அகலத்தில் வாருகால் அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா் மணிமாலா, நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள் (நெடுஞ்சாலைத்துறை) கோட்டப் பொறியாளா் யூஜின், உதவி பொறியாளா்கள் பிரேம்சங்கா், லோகராஜன் மற்றும் அதிகாரிகள், ஊழியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ஏ.ஐ. வசதியுடன் 44 அதிநவீனக் கேமராக்கள் சோதனை இயக்கம்

‘அதிவேக இணையதள வசதியுடன் மாணவா்களுக்காக டிஜிட்டல் கற்றல் மையங்கள் உருவாக்கப்படும்’

வாருகால் அமைக்காமல் சாலை சீரமைப்பு: மக்கள் ஆட்சேபத்தால் திரும்பிச்சென்ற அதிகாரிகள்

16 ஆண்டுகளாக அணுகுசாலை கேட்கும் மக்கள்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


