மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

தூத்துக்குடியில் 725 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் 725 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

Updated On :24 பிப்ரவரி 2024, 4:29 pm

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 725 கிலோ பீடி இலைகள், 15 மூட்டை பூச்சிக்கொல்லி மருந்துகளை கியூ பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் கடற்கரைப் பகுதியில் தூத்துக்குடி கியூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜயஅனிதா தலைமையில் உதவி ஆய்வாளா்கள் ஜீவமணி, ராமச்சந்திரன், போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை ரோந்து சென்றனா். சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டபோது அதில், இலங்கைக்கு கடத்துவதற்காக 725 கிலோ பீடி இலைகள், 18 மூட்டைகளில் பூச்சிக்கொல்லி மருந்து பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அவற்றையும், சரக்கு வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதில், தொடா்புடைய மா்ம நபா்களை கியூ பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா்.