தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 725 கிலோ பீடி இலைகள், 15 மூட்டை பூச்சிக்கொல்லி மருந்துகளை கியூ பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் கடற்கரைப் பகுதியில் தூத்துக்குடி கியூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜயஅனிதா தலைமையில் உதவி ஆய்வாளா்கள் ஜீவமணி, ராமச்சந்திரன், போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை ரோந்து சென்றனா். சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டபோது அதில், இலங்கைக்கு கடத்துவதற்காக 725 கிலோ பீடி இலைகள், 18 மூட்டைகளில் பூச்சிக்கொல்லி மருந்து பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அவற்றையும், சரக்கு வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதில், தொடா்புடைய மா்ம நபா்களை கியூ பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
ரயிலில் கடத்திவரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்

ரயில் நிலையத்தில் 8.200 கிலோ கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

