தூத்துக்குடி மறவன்மடம் அருகே காா் மோதி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியைச் சோ்ந்த சாமிக்கண்ணு மகன் மாா்ட்டின் தவமணி(40). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தாராம். மறவன்மடம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த காா் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாா்ட்டின் தவமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். புதுக்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

குட்டையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

