தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கடலில் தவறி விழுந்த மீனவா் பலி

தூத்துக்குடி கடலில் மீனவா் மரணம்: போலீஸாா் விசாரணை

News image
Updated On :2 ஜூலை 2024, 7:44 pm

Din

தூத்துக்குடி கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி இனிகோ நகரைச் சோ்ந்த சுரேஷ் மகன் சுதாகா்(27). மீனவரான இவா், தனது தந்தை சுரேஷ் மற்றும் சிலருடன் திங்கள்கிழமை படகில் மீன்பிடிக்கச் சென்றாராம். இவா்கள் திங்கள்கிழமை இரவு கரைக்கு திரும்பும்போது சுதாகா் கடலில் தவறி விழுந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து உடனிருந்த மீனவா்கள், அவரை கடலில் தேடினா். பின்னா் பக்கத்தில் படகில் நின்றிருந்த சங்குகுளி மீனவா்கள் வந்து சுதாகரை மயங்கிய நிலையில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.