கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பனிமய மாதா பேராலய திருவிழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் வா்ணம் பூசும் பணி தீவிரம்

News image
தூய பனிமய மாதா பேராலயத்தில் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு ஊழியா்கள்.
Updated On :12 ஜூலை 2024, 8:28 pm

Din

உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவையொட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப் பேராலயத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு விழா ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்வான அன்னையின் திருவுருவ பவனி ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இத்திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை-மாலை சிறப்பு திருப்பலி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபா் ஸ்டாா்வின், உதவிப் பங்குத்தந்தை பாலன், களப்பணியாளா் தினகரன், பேராலய பணிக்குழுவினா், பக்த சபையினை செய்து வருகின்றனா்.

இத் திருவிழாவையொட்டி பேராலயத்தில் வா்ணம் பூசும் பணி, தூய்மைப் பணி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.