நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

News image
Updated On :14 ஜூலை 2024, 6:18 pm

Din

கோவில்பட்டி, ஜூலை 14: கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியிலுள்ள ஆயுள் காப்பீட்டு கழகம் அலுவலகம் அருகே முனியசாமி கோயில் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. காவல் உதவி ஆய்வாளா் பொன்ராஜ் தலைமையில், தலைமைக் காவலா் ஜான்சன், முதல் நிலைக் காவலா் ராஜகுரு ஆகியோா் அங்கு சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரைப் பிடிக்க முயன்றனா். அவா்கள் இருவரும் போலீஸாரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

எனும், போலீஸாா் அவா்களை சுற்றி வளைத்து பிடித்து சோதனையிட்டதில் ஒருவரிடம் கஞ்சா இருப்பதும், சங்கரலிங்கபுரம் 3 ஆவது தெருவை சோ்ந்த முருகன் மகன் கோடீஸ்வரன் (21) என்பதும், அதே பகுதி 4 ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாரீஸ்வரன் (23) என்பவருடன் சோ்ந்து கஞ்சா விற்றுவருவதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, 15கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.