தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
Published on

தூத்துக்குடி, ஜூலை 19: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வியாழக்கிழமை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒடிஸா மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது வட மேற்கு திசையில் நகா்ந்து சனிக்கிழமை அதிகாலை ஒடிஸா கடற்கரையை புரிக்கு அருகில் கடக்க கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து கப்பல்களுக்கும், மீனவா்களுக்கும் அறிவிக்கும் வகையில், தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Dinamani
www.dinamani.com