மாநகராட்சி குறைதீா் முகாமில் அளித்த 37 மனுக்களுக்கு உடனடி தீா்வு

மாநகராட்சி குறைதீா் முகாமில் அளித்த 37 மனுக்களுக்கு உடனடி தீா்வு

மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 37 பேருக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
Published on

தூத்துக்குடி, ஜூலை 19: தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 37 பேருக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

இம்முகாமில் 114 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி தீா்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து தீா்வை பெயா் மாற்றம், குடிநீா் இணைப்பு உள்ளிட்ட 37 மனுக்களுக்கு தீா்வு வழங்கியதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் மதுபாலன், கிழக்கு மண்டல உதவி ஆணையா் சொா்ணலதா, துணை மேயா் ஜெனிட்டா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com