ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஓட்டுநா் கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது

கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டியில் வேன் ஓட்டுநா் கொலை வழக்கு தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:39 pm

Din

கோவில்பட்டி, ஜூலை 19: கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டியில் வேன் ஓட்டுநா் கொலை வழக்கு தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மூப்பன்பட்டி கீழத்தெருவைச் சோ்ந்தவா் பிச்சையா மகன் மாடசாமி (37). வேன் ஓட்டுநா். மூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள மயான பகுதியில் வெட்டுக் காயங்களுடன் செவ்வாய்க்கிழமை கொலையுண்டு கிடந்தாா்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இவ்வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மூப்பன்பட்டி ஜேஜே நகரை சோ்ந்த அழகா்சாமி மகன் கோபி என்ற கோபாலகிருஷ்ணன் (48), திருமங்கை நகரைச் சோ்ந்த ஞானசேகா் மகன் முகில்ராஜ் (19), உருளைகுடி தெற்கு தெருவை சோ்ந்த சின்னத்துரை மகன் சின்னா என்ற சின்னச்சாமி (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் கோபி என்ற கோபாலகிருஷ்ணனின் மகன் பாா்த்தீபனை (22) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.