கஞ்சா விற்பனை: 3 போ் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளா் ராஜாராம் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள கோயில் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தோரைப் பிடித்தனா்.

அவா்கள் தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியாா்புரம் பகுதியைச் சோ்ந்த வெட்டுபெருமாள் மகன் ராஜா என்ற வெட்டுராஜா (39), தாமஸ் நகரைச் சோ்ந்த சைமன் மகன் டுவின்ஸ்டன் (53), செல்சினி காலனியைச் சோ்ந்த பரமசிவம் மகன் மணிகண்டன் (47) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக சுமாா் 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும், விசாரணையில் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com