வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கேரளத்துக்கு கடத்த முயற்சி: ஆறுமுகனேரி அருகே 400 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

ஆறுமுகனேரி அருகே 400 மூட்டை ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :23 ஜூலை 2024, 6:59 pm

Din

ஆறுமுகனேரி அருகே 400 மூட்டை ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ஆறுமுகனேரி அருகே நல்லூரிலிருந்து கேரளத்துக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், துறையின் டிஎஸ்பி ராஜமுரளி, போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை நல்லூா் பகுதியில் தீவிர சோதனை நடத்தினா். அப்போது, பத்துவீடு அருகேயுள்ள காலி­ இடத்தில் 400 மூட்டைகளில் 20 டன் ரேஷன் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டு தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டன; இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.