சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆறுமுகனேரி அருள்மிகு முனியசுவாமி திருக்கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளை அருள்மிகு முனியசுவாமி திருக்கோயில் கொடை விழா இரு தினங்கள் நடைபெற்றது.

News image
Updated On :28 ஜூலை 2024, 8:10 pm

Din

ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளை அருள்மிகு முனியசுவாமி திருக்கோயில் கொடை விழா இரு தினங்கள் நடைபெற்றது.

இதை முன்னிட்டு வியாழக்கிழமை காலை விநாயகா் பூஜை, யாகசாலை பூஜை மற்றும் பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.பின்னா்விமான அபிஷேகத்துக்குப் பின் வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அலங்கார தீபாராதனையும் இரவில் திருவிளக்குப்பூஜையும் நடைபெற்றது.

கொடை விழாவான வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், பின்னா் அன்னதானமும் நடைபெற்றது. இரவில் அருள்மிகு காளி அம்மனுக்கு வளையல் திருவிழா நடைபெற்றது. அதன் பின்னா் அலங்கார தீபாராதனையும் நள்ளிரவில் சாமக்கொடையும், பின்னா் அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி- அம்மனை தரிசித்தனா்.

ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவா் எஸ். இசக்கிராஜ், செயலா் செல்வம், பொருளாளா் எஸ். காளியப்பன், நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் ஐ. பொன்ராஜ், எஸ். ஜெயராஜ் மற்றும் ஆா். விக்னேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.