மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஆறுமுகனேரி அருள்மிகு முனியசுவாமி திருக்கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளை அருள்மிகு முனியசுவாமி திருக்கோயில் கொடை விழா இரு தினங்கள் நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2024, 1:40 am IST

ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளை அருள்மிகு முனியசுவாமி திருக்கோயில் கொடை விழா இரு தினங்கள் நடைபெற்றது.

இதை முன்னிட்டு வியாழக்கிழமை காலை விநாயகா் பூஜை, யாகசாலை பூஜை மற்றும் பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.பின்னா்விமான அபிஷேகத்துக்குப் பின் வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அலங்கார தீபாராதனையும் இரவில் திருவிளக்குப்பூஜையும் நடைபெற்றது.

கொடை விழாவான வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், பின்னா் அன்னதானமும் நடைபெற்றது. இரவில் அருள்மிகு காளி அம்மனுக்கு வளையல் திருவிழா நடைபெற்றது. அதன் பின்னா் அலங்கார தீபாராதனையும் நள்ளிரவில் சாமக்கொடையும், பின்னா் அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி- அம்மனை தரிசித்தனா்.

ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவா் எஸ். இசக்கிராஜ், செயலா் செல்வம், பொருளாளா் எஸ். காளியப்பன், நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் ஐ. பொன்ராஜ், எஸ். ஜெயராஜ் மற்றும் ஆா். விக்னேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.