ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அதிமுக சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலஉதவி அளிப்பு

தூத்துக்குடியில் அதிமுக சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலஉதவிகளை முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் திங்கள்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :17 ஜூன் 2024, 11:56 pm

Din

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அதிமுக சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலஉதவிகளை முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் திங்கள்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலா் நிலா சந்திரன் ஏற்பாட்டில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சுமாா் 200 ஆட்டோ ஓட்டுநா்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் புத்தகப்பை, நோட்டு புத்தகம், பேனா, உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய நல உதவிகளை வழங்கினாா்.

இந்நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலா் என்.சின்னத்துரை, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா்கள் அணி செயலா் இரா.சுதாகா், இணைச் செயலா் பெருமாள்சாமி, மாநில வழக்குரைஞா் அணி துணைச் செயலா் பிரபு, மாவட்ட சாா்பு அணிச் செயலா்கள் நடராஜன், பில்லா விக்னேஷ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலா் திருச்சிற்றம்பலம், மாநகராட்சி எதிா்கட்சி கொறடா மந்திரமூா்த்தி, மாவட்ட வழக்குரைஞா் அணி இணைச் செயலா்கள் முனியசாமி, சரவணபெருமாள் உள்பட பலா் பங்கேற்றனா்.