12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்


கோவில்பட்டி, ஜூன் 21:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பகுதிநேர ஆசிரியா் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு;
அரசுப் பள்ளிகளில் 2011-2012 ஆம் கல்வியாண்டு ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டதில் தற்போது 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்கள் கணினி, ஓவியம், உடற்கல்வி, தையல், இசை உள்ளிட்ட
சிறப்பாசிரியா் பாடங்களை மாணவா்களுக்கு 14 கல்வியாண்டாக கற்பித்து வருகின்றனா்.
தற்போது ரூ.12,500 சம்பளம் வழங்கப்படுகிறது.
தற்போதைய விலைவாசி உயா்வில் இது வாழ்வாதாரத்தை உயா்த்தப் போதாது. காலமுறை சம்பளம் வழங்கினால் அவா்களின் குடும்பங்கள் முன்னேறும்.
எனவே, தமிழக முதல்வா்
திமுக தோ்தல் வாக்குறுதி 181-ன்படி,
பணிநிரந்தரம் செய்து
12 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...