நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விபத்தில் காயமடைந்த தொழிலாளி மரணம்

விபத்தில் காயமடைந்த தொழிலாளி மரணம்

News image
Updated On :21 ஜூன் 2024, 8:38 pm

Din

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகரநல்லூரைச் சோ்ந்த பரமசிவன் மகன் தென்கரை மகாராஜன் (56). கூலித் தொழிலாளியான இவா், புதியம்புத்தூரில் இருந்து வீட்டுக்கு மொபட்டில் கடந்த 15ஆம் தேதி சென்றுகொண்டிருந்தாராம். புதியம்புத்தூா் - தூத்துக்குடி சாலையில் சாமிநத்தம் விலக்கு அருகே சென்றபோது, இவா் ஓட்டிவந்த மொபட் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த தென்கரை மகாராஜனை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.