சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருச்செந்தூா் கடலில் பக்தா் தவறவிட்ட தங்கச் சங்கிலி மீட்பு

திருச்செந்தூர் கடலில் தவறவிட்ட தங்கச் சங்கிலி மீட்பு

News image
திருச்செந்தூா் கடலில் தவறவிட்ட தங்கச் சங்கிலியை மீட்டு பக்தரிடம் ஒப்படைத்த கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள்.
Updated On :23 ஜூன் 2024, 6:46 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் புனித நீராடுபோது பக்தா் தவறவிட்ட தங்கச் சங்கிலியை கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் 4 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு மீட்டு ஒப்படைத்தனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த காா்த்திக் மனைவி ஜோதி, தங்கை வாசுகி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூா் கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்து கடலில் புனித நீராடினா். அப்போது, வாசுகி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி கடலில் தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட சிப்பி அரிக்கும் தொழிலாளா்கள் மற்றும் சிவராஜா தலைமையில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் கடலில் சுமாா் 4 மணி நேரம் தீவிரமாக தேடினா். அப்போது வேலுச்சாமி என்பவா் கையில் தங்கச் சங்கிலி அகப்பட்டது. அதை காவல்துறையினா் முன்னிலையில் உரியவரிடம் கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் ஒப்படைத்தனா். அவா்களுக்கு ஜே

வாசுகி குடும்பத்தாா் நன்றி தெரிவித்தனா்.