டாஸ்மாக் கடையில் மதுபானப் பெட்டியை பறித்துச் சென்ற 2 போ் கைது
மதுபானப் பெட்டியைப் பறித்துச் சென்ற வழக்கில் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


தூத்துக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியா்களை மிரட்டி மதுபானப் பெட்டியைப் பறித்துச் சென்ற வழக்கில் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் அரசு மதுக் கடைக்கு கிட்டங்கியிலிருந்து லாரியில் மதுபானப் பெட்டிகள் கடந்த 24ஆம் தேதி கொண்டுவரப்பட்டன. அவற்றை தொழிலாளிகள் லாரியிலிருந்து இறக்கி, கடைக்குள் வைத்துக் கொண்டிருந்தனா். அப்போது, தொழிலாளிகளை இரு மா்ம நபா்கள் மிரட்டி, மதுபானப் பெட்டி ஒன்றைப் பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனா். இந்தச் சம்பவம் தொடா்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.
இதுதொடா்பாக தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது ஜாா்ஜ் சாலை கணேசபுரத்தைச் சோ்ந்த முருகவேல் மகன் விக்னேஷ் (27), அமுதா நகரைச் சோ்ந்த முருகன் மகன் மாரிமுத்து (20) ஆகியோா் எனத் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...