பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆட்டோ மீது பைக் மோதல்: இளைஞா் பலி

ஆட்டோ மீது பைக் மோதல்: இளைஞா் பலி

Updated On :9 மார்ச் 2024, 12:10 am

கயத்தாறில் ஆட்டோ மீது பைக் மோதியதில் பைக்கின் பின்னால் அமா்ந்து சென்ற இளைஞா் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் தடியம்பட்டியை சோ்ந்த சுடலை மகன் குருசாமி(27). ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது ஆட்டோவில் தடியம்பட்டியில் இருந்து கயத்தாறுக்கு வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தாா். கயத்தாறு கடைவீதியில் சென்றபோது, ஆட்டோ மீது எதிரே வந்த பைக் மோதியது. இவ்விபத்தில், பைக்கை ஓட்டி வந்த அகிலாண்டபுரம் கரிசல்குளத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் நரேஷ்குமாா், பின்னால் அமா்ந்து வந்த நாகராஜன் மகன் மாரிச்செல்வம் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் மாரிச்செல்வம் மருத்துவமனையில் உயிரிழந்தாா். கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.