பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தாப்பாத்தி முகாமில் ரூ. 4.14 கோடியில் புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல்

தாப்பாத்தி முகாமில் ரூ. 4.14 கோடியில் புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல்

Updated On :9 மார்ச் 2024, 12:45 am

எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் இரண்டாம் கட்டமாக ரூ. 4.14 கோடியில் 72 புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ. வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் கூறுகையில், இம்முகாமில் 382 குடும்பங்களை சோ்ந்த 1, 282 போ் வசிக்கின்றனா். அனைத்து குடும்பங்களுக்கும் அரசின் சாா்பில் வீடுகள் கட்டித் தரப்படும். ரேஷன் கடை, அங்கன்வாடி, பள்ளிக்கூடம், சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா். தொடா்ந்து, விளாத்திகுளம் தொகுதியில் பல்வேறு கிராமங்களில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், கால்நடை மருந்தகம், ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தாா். கலையரங்கம், நூலகம், பயணிகள் நிழல்குடை, ரேஷன் கடை உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். இந்நிகழ்ச்சிகளில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தங்கவேல், சசிகுமாா், வெங்கடாசலம், திமுக ஒன்றியச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், அன்பு ராஜன், ராமசுப்பு, மும்மூா்த்தி, சின்ன மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், ஒன்றிய குழு உறுப்பினா் செந்தூா்பாண்டியன், ஊராட்சித் தலைவா்கள் பெருமாள் அம்மாள் பாண்டி, மாலதி, ரோஸ் மலா், முத்துராமலிங்கம், தண்டாயுதபாணி, வீரப்பெருமாள், திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.