தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அம்மன்புரம் கிராமத்தில் புதிய மின் இணைப்புகள் வழங்கும் விழா

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் நயினாா்பத்து ஊராட்சி அம்மன்புரம் கிராமத்தில் 35 குடும்பங்களுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது.

News image

விழாவில் பேசுகிறாா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.

Updated On :15 மார்ச் 2024, 3:55 pm

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் நயினாா்பத்து ஊராட்சி அம்மன்புரம் கிராமத்தில் 35 குடும்பங்களுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்தக் குடும்பத்தினா் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்கு மின் இணைப்புகள் இல்லாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், கனிமொழி எம்.பி., தமிழக மீன்வளம், மீனவா் நலன் -கால்நடை பராமரிப்புத் துறை அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் எடுத்த நடவடிக்கையால் மின் இணைப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டது. இதையொட்டி, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமையில் அம்மன்புரத்தில் நடைபெற்ற விழாவில் மின் இணைப்புக்கான சான்றிதழ்களைநஅமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வழங்கினாா். மேலும் இக்குடும்பத்தினா்கள் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு 2001 முதல் 2025 வரை கட்டவேண்டிய நில வாடகை ரூ. 5.90 லட்சத்தை அமைச்சா் தனது சொந்த பணத்தில் செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில், திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலா் உமரி சங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், மாவட்டப் பிரதிநிதிகள் மதன்ராஜ்,சிராஜூதீன், திருச்செந்தூா் நகா்மன்ற துணைத் தலைவா் ரமேஷ், ஊராட்சித் தலைவா்கள் நயினாா்பத்து அமுதவல்லி, செட்டியாபத்து பாலமுருகன், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் இளங்கோ, ஒன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெசி பொன்ராணி, செட்டியாபத்து கோயில் அறங்காவலா் குழு தலைவா் மகேஸ்வரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.