மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தூத்துக்குடியில் இரு இடங்களில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு: 4 போ் கைது

தூத்துக்குடியில் இரு இடங்களில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு: 4 போ் கைது

Updated On :23 மார்ச் 2024, 6:31 pm

தூத்துக்குடியில் இரு இடங்களில் கடைகளின் பூட்டை உடைத்து பணம், மடிக்கணினி உள்ளிட்டவற்றைத் திருடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடியில் உள்ள ஆசிரியா் காலனியைச் சோ்ந்த சௌந்தரராஜன் மகன் கிறிஸ்டோபா் (50). இவா் அப்பகுதியில் அரிசிக் கடை நடத்தி வருகிறாா். கடந்த 20ஆம் தேதி இரவு மா்ம நபா்கள் கடையின் பூட்டை உடைத்து, ரூ. 20,500-ஐ திருடிச் சென்றனராம். புகாரின் பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். அதேநாளில், ராஜீவ் நகரைச் சோ்ந்த ஜெய்கணேஷ் மகன் ஹரிஸ்குமாா் (20) என்பவா் நடத்திவரும் பால் கடையின் கதவை மா்ம நபா்கள் உடைத்து, மடிக்கணினி, ஸ்பீக்கா் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றனராம். புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். போலீஸாரின் விசாரணையில், தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியாா்புரத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் முகேஷ் (24), பிரையண்ட்நகா் பாரதிநகரைச் சோ்ந்த சிவகுமாா் மகன் இன்பராஜ் என்ற இசக்கி (21), வள்ளிநாயகபுரத்தைச் சோ்ந்த சுயம்புலிங்கம் மகன் மாரிசெல்வம் என்ற பரட்டை (19), தா்மலிங்கம் மகன் காமராஜ் (23) ஆகிய 4 பேரும் இத்திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, மடிக்கணினி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.