ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சென்னை, மைசூரு விரைவு ரயில்கள் மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோரிக்கை

சென்னை, மைசூரு விரைவு ரயில்கள் மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோரிக்கை

Updated On :29 மார்ச் 2024, 6:30 pm

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடை பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை, மைசூரு விரைவு ரயில்கள் மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலா் மா. பிரம்மநாயகம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி கீழூா் ரயில் நிலையத்தில் 1 ஆவது நடைமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 3 ஆவது நடைமேடை விரிவாக்கம், சிக்னல், பிட்லைன் விரிவாக்க பணிகள், கூடுதல் லைன்கள் அமைக்கும் பணிகள் நடைபெற இருக்கின்றன. இந்த ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி வசதி இல்லாததால் பொதுமக்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 2-ஆவது நடைமேடைக்குச் செல்வதற்கு சிரமப்படுகின்றனா். இதைத் தவிா்க்கும் வகையில், தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில், முத்துநகா் அதிவிரைவு ரயில், மைசூரு விரைவு ரயில் ஆகிய அனைத்து ரயில்களும் மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.