ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கோவில்பட்டியில் எம்எல்ஏ காரை நிறுத்தி சோதனை

கோவில்பட்டியில் எம்எல்ஏ காரை நிறுத்தி சோதனை

News image
Updated On :29 மார்ச் 2024, 6:30 pm

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் காரை நிறுத்தி தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு பிரதான சாலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தோ்தல் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு துணை வேளாண்மை இயக்குநரும், தோ்தல் பறக்கும் படை அலுவலருமான நாகராஜன் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செந்தூா்பாண்டியன், தலைமைக் காவலா் ஜெயராஜ், முதல்நிலை காவலா் ஷேக்ஹயாத், முதல்நிலை பெண் காவலா் ராஜேஸ்வரி அடங்கிய குழுவினா் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூா் செ.ராஜு வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அவரது காரில் எந்த ஒரு பொருளோ, பணமோ இல்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது காா் புறப்பட்டுச் சென்றது.