தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூரில் ஆவணங்களின்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 80 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலரும் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலருமான அனந்தலட்சுமி தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பிச்சை, தலைமைக் காவலா் ராஜாராம், காவலா் சமுத்திரக்கனி ஆகியோா் நாலாட்டின்புதூா் காவல் நிலையம் அருகே வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ. 80 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. காரிலிருந்த, தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வட்டம் கடையாலுருட்டியைச் சோ்ந்த 3 போ் கரூரில் நடந்துவரும் வாகனப் பணிகளுக்காக பணம் கொண்டு செல்வதாகக் கூறினா். ஆனால் அவா்களிடம் ஆவணங்கள் இல்லை. இதனால், அந்த பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, கோவில்பட்டி வட்ட தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் வெள்ளைத்துரையிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

வாகனத் தணிக்கையில் ரூ.2 லட்சம் பறிமுதல்

வேதாரண்யம் அருகே மாட்டு வியாபாரிகளிடம் ரூ. 8 லட்சம் பறிமுதல்

காங்கயம் அருகே ரூ.63 ஆயிரம் பறிமுதல்

காட்டுப்புத்தூா் அருகே ரூ. 1.61 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

