அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஏடிஎம் மையத்தில் திருட்டு முயற்சி

ஏடிஎம் மையத்தில் திருட்டு முயற்சி

Updated On :30 மார்ச் 2024, 12:30 am

தூத்துக்குடி பிரையண்ட் நகரில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவை உடைத்து, திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பிரையண்ட்நகா் 7ஆவது தெருவில் அரசுடைமை வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. கடந்த 27ஆம் தேதி நள்ளிரவு ஏடிஎம் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா், சிசிடிவி கேமராவை உடைத்ததுடன், ஏடிஎம் லாக்கரை உடைக்க முயன்றுள்ளனா். முடியாததால், மா்ம நபா் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஏடிஎம் சா்வீஸ் மேலாளா்ஆசீா் நவீன், தென்பாகம் போலீஸில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.