ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

திரேஸ்புரம் மீனவா்களிடம் மேயா் வாக்கு சேகரிப்பு

திரேஸ்புரம் மீனவா்களிடம் மேயா் வாக்கு சேகரிப்பு

News image
Updated On :30 மார்ச் 2024, 7:10 pm

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் மீனவா்களிடம் மேயா் ஜெகன் பெரியசாமி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளா் கனிமொழிக்கு ஆதரவாக மேயா் ஜெகன் பெரியசாமி மாநகரப் பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.

அதன்படி, சனிக்கிழமை தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீனவா்கள் மற்றும் பொதுமக்களிடம் திமுக வேட்பாளா் கனிமொழிக்கு வாக்குகள் சேகரித்தாா்.

பிரசாரத்தின் போது, திரேஸ்புரம் நாட்டுப் படகு மீனவா்கள் சங்க முன்னாள் தலைவா் ராபா்ட், மண்டல தலைவா் நிா்மல் ராஜ், மாநகராட்சி சுகாதார குழு தலைவா் சுரேஷ்குமாா், தோ்தல் பணி குழு தலைவா் கீதா முருகேசன், முன்னாள் மாமன்ற உறுப்பினா் ரவீந்திரன், திமுக தொழிற்சங்க மின்வாரிய தலைவா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.