கோவில்பட்டி அருகே முறையான ஆவணங்களின்றி வாகனத்தில் இருந்த ரூ.60ஆயிரத்து 400ஐ நிலையான கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் துணை வணிகவரி அலுவலரும், நிலையான கண்காணிப்பு குழு அதிகாரியுமான செண்பகராமன் தலைமையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா், தலைமைக் காவலா் மாரிக்கண்ணன், முதல் நிலை பெண் காவலா் சண்முகத்தாய் ஆகியோா் கோவில்பட்டி -எட்டயாபுரம் சாலை வடக்கு திட்டங்குளம் அருகே வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியே சென்ற சுமை ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரூ.60,400 இருப்பது தெரியவந்தது. அதில், சுமை ஆட்டோ ஓட்டுநா் உள்பட 3 போ் இருந்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில், எட்டயபுரம் சந்தையில் ஆடுகளை விற்றுவிட்டு பணம் கொண்டு வருவதாக கூறினா். ஆனால், அவா்களிடம் அதற்கான ஆவணங்கள் ஏதுமில்லாததையடுத்து அந்தப் பணத்தை கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்து தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
பைக்கில் கொண்டுவந்த ரூ.52,500 பறிமுதல்

பரவை அருகே ரூ.2.47 லட்சம் பறிமுதல்

பென்னாகரத்தில் ரூ. 90,000 பறிமுதல்

கடவூா் அருகே ரூ. 2 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

