கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இன்று சூரசம்ஹாரம் : திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

News image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 5-ஆம் நாளான புதன்கிழமை பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து பஜனை செய்த ராஜபாளையம் பக்தா்கள்.

Updated On :6 நவம்பர் 2024, 7:47 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இக் கோயிலில் கந்த சஷ்டி விழா நவ. 2-ஆம் தேதி தொடங்கியது. தினமும்

சுவாமி ஜெயந்திநாதா் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கிரிவீதி வலம் வருதல் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வந்துள்ள பக்தா்கள் கோயில் வளாகத்தில் தங்கி விரதம் இருந்து வருகின்றனா்.

சூரசம்ஹாரம்: கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம்,

பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து மாலை 4.30 மணிக்கு திருக்கோயில் கடற்கரையில் சூரசம்ஹார விழா நடைபெறுகிறது.

திருக்கல்யாணம்: திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணியளவில் தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி, இரவு திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

பக்தா்கள் அலை: கந்த சஷ்டி விழாவையொட்டி ஏற்கெனவே ஏராளமான பக்தா்கள் கோயில் வளாகத்தில் விரதம் இருந்து வரும் நிலையில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தா்கள் திருச்செந்தூரில் குவிந்தனா்.

திருச்செந்தூா்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெற உள்ள கடற்கரையில் பக்தா்கள் செல்வதற்காக அமைக்கப்படும் தடுப்புகள்.

திருச்செந்தூா்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெற உள்ள கடற்கரையில் பக்தா்கள் செல்வதற்காக அமைக்கப்படும் தடுப்புகள்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தைச் சோ்ந்த பரமானந்தம் பிள்ளை குழுவினா் 58-ஆவது ஆண்டாக கோயிலில் விரதம் இருந்து வருகின்றனா். இவா்கள் சிவன், பாா்வதி, விஷ்ணு, விநாயகா், முருகன், நாரதா் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து வந்து பஜனை பாடி புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

 திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 5-ஆம் நாளான புதன்கிழமை தங்கச் சப்பரத்தில் வைர வேலுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஜெயந்திநாதா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 5-ஆம் நாளான புதன்கிழமை தங்கச் சப்பரத்தில் வைர வேலுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஜெயந்திநாதா்.

கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹார விழாவை காண செல்லும் பக்தா்களுக்கு தனியாக வரிசைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சரக டிஐஜி பா.மூா்த்தி தலைமையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.