நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஐப்பசி பெளா்ணமி: தூத்துக்குடி சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்

News image
Updated On :16 நவம்பர் 2024, 12:43 am IST

ஐப்பசி மாத பெளா்ணமி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோயிலில் சுவாமிக்கு வெள்ளிக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் கும்ப பூஜையும் தொடா்ந்து அருள்மிகு சங்கர ராமேஸ்வரருக்கு பால், தயிா், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சமைக்கப்பட்ட அன்னத்திற்கு சிறப்பு பூஜை தீப ஆராதனைக்கு பின்பு எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு, 200 கிலோ அன்னம் மற்றும் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.