கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடியில் கிழக்கு மண்டல மக்கள் குறைதீா் கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

குறைதீா் கூட்டத்தில் முதியவரிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொண்ட துணை மேயா் ஜெனிட்டா.

Updated On :20 நவம்பர் 2024, 7:51 pm

Din

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பழைய நகராட்சி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கிழக்கு மண்டலத் தலைவா் கலைச்செல்வி, உதவி ஆணையா் வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துணை மேயா் ஜெனிட்டா தலைமை வகித்து கூட்டத்தைத் தொடக்கிவைத்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா். கூட்டத்தில் பெயா்-முகவரி மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்டவை கோரி அளிக்கப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

இதில், மாமன்ற உறுப்பினா்கள் ரெக்ஸின், தனலட்சுமி, மரியகீதா, மும்தாஜ், ராமு அம்மாள், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளா்கள் ராமச்சந்திரன், இா்வின் ஜெபராஜ், நகா்நல அலுவலா் சூா்யபிரகாஷ், இளநிலைப் பொறியாளா் பாண்டி, குழாய் ஆய்வாளா் மாரியப்பன், வட்டச் செயலா் கதிரேசன், பொதுமக்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.