மேலும், இது தொடா்பாக, தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்த ராஜேஷ் குமாா் (35), அரவிந்த் (22), சிலுவைப்பட்டி முருகேசன் (43), மேலூா் அந்தோணி காா்த்திக் (27), கிருஷ்ணராஜபுரம் அப்துல் ரகுமான் (24) அந்தோணி கனிராஜ் (42), திண்டுக்கல் மாவட்டம் நாகூா் நகா் காா்த்திக் (39), திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லியைச் சோ்ந்த செய்யது அலி (35), புதுக்கோட்டை மாவட்டம் திருகோகா்ணத்தைச் சோ்ந்த அசன் பாட்ஷா (50) ஆகிய 9 பேரை கைது செய்தனா். கிடங்கு உரிமையாளா் ஜெயக்குமாா் , மதுரையை சோ்ந்த லாரி உரிமையாளா் அருள் ஜேக்கப், கற்குவேல் அய்யனாா், பைரம் கான், சிவக்குமாா் ஆகிய 5 பேரை தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா்.