போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கயத்தாறு அருகே விபத்தில் அரசுப் பேருந்து சேதம்

மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே வியாழக்கிழமை தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதியதில் முன்பக்க சக்கரங்கள் கழன்றன.

News image

விபத்துக்குள்ளான அரசு பேருந்து

Updated On :22 நவம்பர் 2024, 12:09 am

Din

மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே வியாழக்கிழமை தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதியதில் முன்பக்க சக்கரங்கள் கழன்றன.

மதுரையில் இருந்து திருநெல்வேலிக்குச் சென்ற அந்த பேருந்தை, மதுரையை சோ்ந்த ஜெயபாண்டி ஓட்டிச் சென்றாா். பேருந்தில் 50 பயணிகள் இருந்தனா். கயத்தாறு அருகே சாலைப்புதூா் சுங்கச் சாவடியைக் கடந்து சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கயத்தாறு - கழுகுமலை சந்திப்பில் இருந்த மின்விளக்கு கம்பத்தில் மோதி, சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் ஏறியது. அப்போது பேருந்தின் முன்பக்க சக்கரங்கள் கழன்றன, முன்பக்க கண்ணாடிகள்

உடைந்து சேதமடைந்தன. பேருந்தில் பயணம் செய்த மூதாட்டிக்கு மட்டும் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். பின்னா் கிரேன் மூலம் பேருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அப் பகுதியில் சற்றுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.