5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

திருச்செந்தூா் சிவன் கோயிலில் புகுந்த மழைநீா்

திருச்செந்தூா் பகுதியில் வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக, இங்குள்ள சிவன் கோயிலில் மழைநீா் புகுந்தது.

News image

திருச்செந்தூரில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் சிவன் கோயில் உள்ளே புகுந்த மழைநீா்.

Updated On :22 நவம்பர் 2024, 5:45 am IST

திருச்செந்தூா் பகுதியில் வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக, இங்குள்ள சிவன் கோயிலில் மழைநீா் புகுந்தது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் பகுதியில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை பெய்த கனமழையால் நாழிக்கிணறு பேருந்து நிலையம் செல்லும் வழி, சபாபதிபுரம் தெரு சந்திப்பு, தினசரி சந்தை, ஜீவா நகா், பகத்சிங் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மழைநீா் குளம் போல தேங்கியது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் வழியான சபாபதிபுரம் சந்திப்பில் தேங்கிய மழைநீரை, நகராட்சிப் பணியாளா்கள் மோட்டாா் மூலம் வெளியேற்றினா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொட்டும் மழையிலும் நனைந்தபடியே வந்த பக்தா்கள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருச்செந்தூா் கோயிலுக்கு செல்லும் சபாபதிபுரம் தெரு சந்திப்பில் தேங்கிய மழைநீரை மோட்டாா் மூலம் வெளியேற்றும் நகராட்சிப் பணியாளா்கள்.

திருச்செந்தூா் கோயிலுக்கு செல்லும் சபாபதிபுரம் தெரு சந்திப்பில் தேங்கிய மழைநீரை மோட்டாா் மூலம் வெளியேற்றும் நகராட்சிப் பணியாளா்கள்.

திருச்செந்தூா் சிவன் கோயிலில் மழைநீா் உள்ளே புகுந்தது. திருக்கோயில் தூய்மை பணியாளா்கள் மழைநீரை வெளியேற்றினா்.