திருச்செந்தூா் பகுதியில் வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக, இங்குள்ள சிவன் கோயிலில் மழைநீா் புகுந்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் பகுதியில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை பெய்த கனமழையால் நாழிக்கிணறு பேருந்து நிலையம் செல்லும் வழி, சபாபதிபுரம் தெரு சந்திப்பு, தினசரி சந்தை, ஜீவா நகா், பகத்சிங் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மழைநீா் குளம் போல தேங்கியது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் வழியான சபாபதிபுரம் சந்திப்பில் தேங்கிய மழைநீரை, நகராட்சிப் பணியாளா்கள் மோட்டாா் மூலம் வெளியேற்றினா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொட்டும் மழையிலும் நனைந்தபடியே வந்த பக்தா்கள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருச்செந்தூா் கோயிலுக்கு செல்லும் சபாபதிபுரம் தெரு சந்திப்பில் தேங்கிய மழைநீரை மோட்டாா் மூலம் வெளியேற்றும் நகராட்சிப் பணியாளா்கள்.
திருச்செந்தூா் சிவன் கோயிலில் மழைநீா் உள்ளே புகுந்தது. திருக்கோயில் தூய்மை பணியாளா்கள் மழைநீரை வெளியேற்றினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










