மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கயத்தாறு அருகே 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே 10 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

ரேஷன் அரிசி மூட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட மினி லாரியுடன் கயத்தாறு வட்டாட்சியா் சுந்தரராகவன், மண்டல துணை வட்டாட்சியா் கோவிந்தராஜ், உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன், கடம்பூா் வருவாய் ஆய்வாளா் துரைசாமி உள்ளிட்டோா்

Updated On :27 நவம்பர் 2024, 9:05 pm

Din

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே 10 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வந்த தகவலின்பேரில், கயத்தாறு வட்டாட்சியா் சுந்தரராகவன், மண்டல துணை வட்டாட்சியா் கோவிந்தராஜ், கடம்பூா் வருவாய் ஆய்வாளா் துரைசாமி, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் அரிகண்ணன் ஆகியோா் அடங்கிய குழுவினா் புதன்கிழமை ரோந்து, வாகனசோதனையில் ஈடுபட்டனா்.

குமாரகிரியை அடுத்த வெள்ளாளங்கோட்டை கிராமம் அருள்மிகு ராமானுஜ பெருமாள் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியை சோதனையிட்டபோது, அதில் 250 பாலிதீன் பைகளில் 10 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

ரேஷன் அரிசி, மினி லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, இந்தக் கடத்தலில் ஈடுபட்டோா் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனா்.