ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

எப்போதும்வென்றானில் கிராம சபைக் கூட்டம் : கனிமொழி எம்.பி. பங்கேற்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, எப்போதும்வென்றானில் கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 11:09 pm

Din

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, எப்போதும்வென்றானில் கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா, எப்போதும்வென்றான் ஊராட்சித் தலைவா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டனா்.

கனிமொழி எம்.பி. பேசும்போது, இந்தப் பகுதியில் நீா்நிலைகளில் மண் எடுப்பதற்கு உள்ள தடை அகற்றப்படும். 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. நிதி வந்ததும் மக்களுக்கு வழங்கப்படும். மகளிா் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டோருக்கு விரைவில் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், 3 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 16.50 லட்சம் கடனுதவி, தோட்டக்கலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி வருவாய்க் கோட்டாட்சியா் மகாலட்சுமி, திமுக ஒன்றியச் செயலா்கள் காசிவிஸ்வநாதன், நவநீதகண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.