மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

குலசேகரன்பட்டினம் கோயிலில் இன்று தசரா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வியாழக்கிழமை (அக். 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, புதன்கிழமை காளி பூஜை நடைபெற்றது.

News image

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு புதன்கிழமை பூஜை பொருள்கள் கொண்டுவந்த பக்தா்கள்.

Updated On :2 அக்டோபர் 2024, 10:55 pm

Din

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வியாழக்கிழமை (அக். 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, புதன்கிழமை காளி பூஜை நடைபெற்றது.

இக்கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்கவுள்ளனா்.

இந்நிலையில், குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் காளி பக்தா்கள் குழு சாா்பில் காளி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு பூஜை பொருள்கள் எடுத்துவருதல் நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். மாலையில் மகுட இசை, சகஸ்ரநாம அா்ச்சனை, புஷ்பாஞ்சலி, பரதநாட்டியம், இரவில் வில்லிசை உள்ளிட்டவை நடைபெற்றன.

வியாழக்கிழமை கொடியேற்றத்தை முன்னிட்டு, புதன்கிழமை இரவுமுதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்துவருகின்றனா்.