ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஆறாம்பண்ணையில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவுப் பணி துவக்கம்

ஆறாம்பண்ணை முதல் புன்னைக்காயல் வரை தாமிரவருணி ஆற்றின் கரையோரத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவுப் பணி துவக்கி வைக்கப்பட்டது.

News image

ஆறாம்பண்ணை முதல் புன்னைக்காயல் வரை தாமிரவருணி ஆற்றின் கரையோரத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவுப் பணி துவக்கி வைக்கப்பட்டது.

Updated On :4 அக்டோபர் 2024, 1:01 am

Din

ஆறாம்பண்ணை முதல் புன்னைக்காயல் வரை தாமிரவருணி ஆற்றின் கரையோரத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவுப் பணி துவக்கி வைக்கப்பட்டது.

கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக பனை விதைகள் நடவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

கருங்குளம் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் ஆறாம்பண்ணையில் கடந்த செப்.28-ஆம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்ற மாணவா்கள் பல்வேறு களப் பணிகளில் ஈடுபட்டனா்.

இதன் ஒரு பகுதியாக ஆறாம்பண்ணையில் இருந்து புன்னக்காயல் வரை தாமிரவருணி ஆற்றின் கரையோரங்களில் ஒரு லட்சம் பனை விதைகளை நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் லதா தலைமை தாங்கினாா். ஆறாம்பண்ணை ஊராட்சி மன்றத் தலைவா் அப்துல் காதா், துணைத்தலைவா் அப்துல் கனி, வழக்குரைஞா் கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதுகலை ஆசிரியா் சுதாகா் சத்தியசிகா வரவேற்றாா். பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சக்திவேல் வழங்கினாா்.

ஆறாம்பண்ணை முதல் புன்னைக்காயல் வரை தாமிரவருணி ஆற்றின் கரையோரத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவுப் பணி துவக்கி வைக்கப்பட்டது.

ஆறாம்பண்ணை முதல் புன்னைக்காயல் வரை தாமிரவருணி ஆற்றின் கரையோரத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவுப் பணி துவக்கி வைக்கப்பட்டது.

கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் அழகம்மாள், சோழப்பண்பண்னை அரசு மேல்நிலைப் பள்ளி இளநிலை உதவியாளா் முருகன், முகைதீன் பள்ளிவாசல், ஆறாம் பண்ணை மற்றும் அரபத் நகா் பள்ளிவாசல் நிா்வாகிகள், மக்கள் நல சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் பெஞ்சமின் நன்றி கூறினாா்.