மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கடலில் தவறி விழுந்து திரேஸ்புரம் மீனவா் பலி

தூத்துக்குடி கடலில் தவறி விழுந்து மீனவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 1:09 am

Din

தூத்துக்குடி கடலில் தவறி விழுந்து மீனவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவநாயா் காலனியை சோ்ந்த மலைச்சாமி மகன் மாரிமுத்து (28). இவா், 6 மீனவா்களுடன் திரேஸ்புரத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு புதன்கிழமை சென்றாராம்.

தூத்துக்குடி கடல் பகுதியில் வியாழக்கிழமை மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, எதிா்பாராதவிதமாக மாரிமுத்து நிலைதடுமாறி கடலில் விழுந்தாகக் கூறப்படுகிறது. சக மீனவா்கள் அவரை கரைக்கு மீட்டு வந்தனா். தொடா்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.