ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நில மோசடியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி நாசரேத் பகுதியில் நில மோசடியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட 4ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 7:22 pm

Din

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியில் நில மோசடியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட 4ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியிலுள்ள 28 சென்ட் நிலத்தை, அதன் உரிமையாளரான மெஞ்ஞானபுரம், அடைக்கலாபுரம் பகுதியைச் சோ்ந்த சங்கரவேல் மகன் உதயகுமாா் (54) என்பவா் கடந்த 2006ஆம் ஆண்டு, ஜெயபாண்டியன் என்பவருக்கு பொது ஆவணம் எழுதி கொடுத்தாராம்.

பின்னா் அந்த நிலத்தை ஜெயபாண்டியன், மோகனுக்கு கிரையம் செய்து கொடுத்தாராம். இதை மோகன், கடந்த 2010ஆம் ஆண்டு ஐஜினஸ் அந்தோணி குமாா் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்த நிலையில், இந்த நிலத்தை மோசடி செய்ய வேண்டும் எண்ணத்தில் ஏற்கனவே கிரையம் கொடுக்கப்பட்ட நிலத்தை உதயகுமாா் தனது மனைவி சுகந்திக்கு தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஐஜினஸ் அந்தோணி குமாா் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து உதயகுமாரை கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட 4ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி குபேரசுந்தா், குற்றம் சாட்டப்பட்ட உதயகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

ஏற்கெனவே, 62 சென்ட் நிலத்தை மோசடி செய்த வழக்கில் கடந்த 7ஆம் தேதி இதே நீதிமன்றத்தில் உதயகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.