பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சாத்தான்குளம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக தம்பதி, 2 மகள்கள் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக தம்பதி, 2 மகள்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 11:51 pm

Din

சாத்தான்குளம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக தம்பதி, 2 மகள்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தை அடுத்த மீரான்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சுவாமிதாஸ் மனைவி பாக்கியத்தாய் (63). அதே பகுதியைச் சோ்ந்த துரைராஜ் மகன் ராஜன் என்பவா் மது குடித்துவிட்டு அப்பகுதியினரை அவதூறாகப் பேசிவந்தாராம்.

இந்நிலையில், தனது வீட்டருகே நின்றிருந்த பாக்கியத்தாயை மது போதையில் வந்த ராஜன் அவதூறாகப் பேசினாராம். இதை பாக்கியத்தாய் கண்டித்ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில், ஆத்திரமடைந்த ராஜன் தனது மனைவி சுகந்தி, இரு மகள்களுடன் சோ்ந்து பாக்கியத்தாயை சரமாரியாகத் தாக்கினாராம்.

காயமடைந்த பாக்கியத்தாய் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், 4 போ் மீதும் சாத்தான்குளம் தலைமைக் காவலா் ஜெயக்குமாா் வழக்குப் பதிந்தாா். உதவி ஆய்வாளா் எட்வின்அருள்ராஜ் விசாரித்து வருகிறாா்.