பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வளா்பிறை முகூா்த்தம்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த திருமண ஜோடிகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி ஏராளமான திருமணங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி திருச்செந்தூா் கோயில் முன்பு நடைபெற்ற திருமணங்கள்.
Updated On :6 செப்டம்பர் 2024, 12:02 am

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி ஏராளமான திருமணங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.

இக்கோயிலில் வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் அதிகாலையிலேயே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

வளா்பிறை முகூா்த்தம் என்பதால் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோயில் வளாகமே திருமண வீட்டாா்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.