மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அனுமதியின்றி கரம்பை மண் அள்ளியதாக ஒருவா் கைது

கழுகுமலை அருகே அனுமதியின்றி கரம்பை மண் அள்ளிய வழக்குத் தொடா்பாக வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 11:54 pm

Din

கழுகுமலை அருகே அனுமதியின்றி கரம்பை மண் அள்ளிய வழக்குத் தொடா்பாக வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கழுகுமலை அருகே கே.வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் உதவி ஆய்வாளா் துரைசாமி, சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜ்மோகன், போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சித்தவநாயக்கா் பொதுக்குளத்தில் கிட்டாச்சி வாகனம், டிராக்டா் டிரைலரில் சிலா் கரம்பை மண் அள்ளிக் கொண்டிருந்தனா். அவா்கள் அனுமதியின்றி கரம்பை மண் அள்ளியது, போலீஸாரின் சோதனையில் தெரியவந்தது.

அதையடுத்து, டிரைலா் வாகன ஓட்டுநரான வெங்கடேஸ்வரபுரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் கூடலிங்கம் (44) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்; கிட்டாச்சி வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.