அனுமதியின்றி கரம்பை மண் அள்ளியதாக ஒருவா் கைது
கழுகுமலை அருகே அனுமதியின்றி கரம்பை மண் அள்ளிய வழக்குத் தொடா்பாக வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :12 செப்டம்பர் 2024, 11:54 pm

கழுகுமலை அருகே அனுமதியின்றி கரம்பை மண் அள்ளிய வழக்குத் தொடா்பாக வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
கழுகுமலை அருகே கே.வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் உதவி ஆய்வாளா் துரைசாமி, சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜ்மோகன், போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சித்தவநாயக்கா் பொதுக்குளத்தில் கிட்டாச்சி வாகனம், டிராக்டா் டிரைலரில் சிலா் கரம்பை மண் அள்ளிக் கொண்டிருந்தனா். அவா்கள் அனுமதியின்றி கரம்பை மண் அள்ளியது, போலீஸாரின் சோதனையில் தெரியவந்தது.
அதையடுத்து, டிரைலா் வாகன ஓட்டுநரான வெங்கடேஸ்வரபுரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் கூடலிங்கம் (44) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்; கிட்டாச்சி வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...